search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி பல்கலைக்கழகம்"

    • டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
    • டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவு செப். 22-ம் தேதி நடந்தது.

    டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை சேர்ந்தவர் துணை தலைவர் பதவியை வென்று இருக்கிறார்.

    செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 52 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் தங்களது வாக்கை செலுத்தினர்.

     

    இந்த தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் என நான்கு பதவிகளுக்கான போட்டி நடைபெறும். பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்த 24 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

    இதில் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.), அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.ஏ.), இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டனர். டெல்லி மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

    • நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
    • இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அங்கீகாரத்தைப் பெறுகின்றன.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.

    பிரதமரின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

    பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிானர்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் அல்ல இயக்கம். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது. 100 ஆண்டு கால அடிமைத்தனம் அதன் கல்வி மையங்களை அழித்துவிட்டது. வளர்ச்சியை முடக்கியது.

    சமீபத்திய ஆண்டுகளில் ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது. 2014ல், க்யூஎஸ் உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 45ஆக உயர்ந்துள்ளது.

    கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2014க்கு முன் இந்தியாவில் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சமீபத்தில் நடந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற ஏபிவிபி அமைப்பின் அங்கிவ் பைசோயா போலி சான்றிதழ் அளித்து படிக்க சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. #DUSUElection2018 #ABVP #NSUI
    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வென்றது. செயலாளர் பொறுப்பை காங்கிரசின் மாணவர் அமைப்பு வென்றது.

    தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏபிவிபியின் அங்கிவ் பைசோயா, பிஏ தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இணைந்துள்ளார்.

    ஆனால், அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறப்பட்ட பட்டச் சான்றிதல் போலீயானது என காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சான்றிதழின் எண்ணை பல்கலைக்கழகத்தில் கொடுத்து விசாரித்ததில், அது போலியானது என பல்கலைக்கழம் கடிதம் அனுப்பியுள்ளதை அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏபிவிபி பட்டச்சான்றிதழ்களை ஆய்வு செய்தே டெல்லி பல்கலைக்கழகம் அங்கிவ்க்கு எம்.ஏ சீட் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது. 
    ×